பாகிஸ்தானுக்கு எதிரான ஆசியக் கோப்பைப் போட்டியை இந்திய அணிப் புறக்கணிக்க வேண்டும் என்ற குரல்களை மறுத்து, பாகிஸ்தானுடன் விளையாடி இந்திய அணி வெற்றி பெற்றது. ஆனால், டாஸின்போது இரு அணி கேப்டன்களும் கைகொடுத்துக் கொள்ளவில்லை. போட்டி முடிந்த பிறகு ஸ்போர்ட்ஸ்மென் ஸ்பிரிட் உணர்வுடன் இரு அணி வீரர்களும் கைகுலுக்கிக் கொள்வது வழக்கம், அந்த நிகழ்வும் நடைபெறவில்லை.
இன்னும் நிறைய என்னென்னவோ செய்திகள் அடிபட்ட வண்ணம் இருக்கின்றன. இந்திய அணியின் ஓய்வறை வாசலில் பாகிஸ்தான் வீரர்கள் காத்துக் கொண்டிருந்தபோது இந்திய அணி ஓய்வறைக் கதவு படாரென்று சாத்தப்பட்டதாகவும் செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன.