ஹைதராபாத்: "தொகுதி மறுசீரமைப்பு என்பது தென்மாநிலங்களுக்கான வரம்புகள் நிர்ணயமே. அது அவைகளுக்கான தொகுதிகள் குறைப்பாகவே இருக்கும்" என்று தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார். மேலும், தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் மத்திய அரசு தென்மாநிலங்களுக்கு எதிராக சதி செய்கிறது என்றும் சாடியுள்ளார்.
தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் மார்ச் 22-ம் தேதி நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு குறித்த கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் பங்கேற்க வரும்படி 5 மாநில முதல்வர்கள், பல்வேறு கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அவர்களுக்கு கடிதமும் எழுதியுள்ளார். இதனைத் தொடர்ந்து திமுக எம்.பிக்கள், தமிழக அமைச்சர்கள் சம்மந்தப்பட்ட முதல்வர்களைச் சந்தித்து தமிழக முதல்வரின் கடிதங்களை நேரில் வழங்கி கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்து வருகின்றனர்.