மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை, அமெரிக்க உளவுத் துறை தலைவர் துளசி கப்பார்ட் டெல்லியில் நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது இந்தியா, அமெரிக்கா இடையிலான பாதுகாப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் முக்கிய ஆலோசனை நடத்தினர்.
டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் 'அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேசன்' என்ற சிந்தனை குழுவின் சார்பில் ஆண்டுதோறும் 'ரைசினா டயலாக்' என்ற உச்சி மாநாடு நடத்தப்படுகிறது. இந்த மாநாட்டுக்கு மத்திய வெளியுறவுத் துறை மற்றும் பல்வேறு அமைப்புகள் ஆதரவு அளிக்கின்றன.