பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா சாலையோர உணவகம். டெல்லி ராணுவ தலைமை அலுவலகத்தில் பணியாற்றும் கலோனல் புஷ்பிந்தர் பாத் என்பவரை சாதாரண உடையில் இருந்த பஞ்சாப் போலீஸார் சரமாரியாக தாக்கி உள்ளனர். நியாயம் கேட்க வந்த அவரது மகனையும் அடித்து உதைத்துள்ளனர். இதில் இருவரும் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்றுள்ளனர். இந்த சம்பவம் கடந்த 13-ம் தேதி நடைபெற்றது.
ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் டாக்டர் அபிஷேக் ஸ்வரன்கர் (39). பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் (ஐஐஎஸ்இஆர்) விஞ்ஞானியாக பணியாற்றினார். மொஹாலியில் உள்ள ஒரு குடியிருப்பில் தங்கியிருந்தார். கடந்த 11-ம் தேதி பக்கத்து வீட்டில் வசிக்கும் மான்டி என்பவருடன் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பில் முடிந்தது. ஆத்திரத்தில் அபிஷேக்கை தள்ளிவிட்டார் மான்டி. நிலை தடுமாறி கீழே விழுந்த அபிஷேக் மருத்துவமனையில் உயிரிழந்தார்.