திருச்சி: மணப்பாறையில் தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த பள்ளி தாளாளரின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த பள்ளி தாளாளர் சுதாவின் கணவர் வசந்தகுமாரை (54) போலீசார் கைது செய்தனர். உறவினர்கள் நள்ளிரவில் போராட்டத்தில் ஈடுபட்டதால் தாளாளர் சுதா உள்பட பள்ளி நிர்வாகிகள் 4 பேரை கைது செய்தனர். பள்ளி வகுப்பறையிலேயே பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக பெற்றோரிடம் மாணவி புகார் அளித்துள்ளார். மாணவியின் உறவினர்கள் அதே பள்ளிக்கு சொந்தமான மெட்ரிகுலேஷன் பள்ளியின் கண்ணாடியை அடித்து நொறுக்கினர்.
The post பாலியல் தொல்லை – பள்ளி தாளாளர் உள்பட 4 பேர் கைது appeared first on Dinakaran.