புதுடெல்லி: பிம் ஸ்ரீ திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு ஒப்புக்கொண்டது. இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட தயாராக இருந்தது. ஆனால், ஒரு கட்டத்தில் அது தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு அரசியல் செய்து வருகிறது என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் குற்றம் சாட்டியுள்ளார்.
தேசிய கல்விக் கொள்கையை ஏற்று செயல்படும் மத்திய, மாநில, யூனியன் பிரதேச, உள்ளாட்சி அமைப்புகளால் செயல்படுத்தப்படக்கூடிய பள்ளிகளுக்கு நிதி உதவி அளிக்கும் பிஎம் ஸ்ரீ திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் பள்ளிகள், மாதிரி பள்ளிகளாக உருவெடுக்கும் நோக்கில் மத்திய அரசு நிதி உதவி வழங்குகிறது.