சென்னை: பிப்.20 முதல் எந்த நேரத்திலும் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் நடைபெறும் என அண்ணா தொழிற்சங்கம் அறிவித்துள்ளது. சென்னையில் நேற்று அண்ணா தொழிற்சங்கத்தின் தலைமையின் கீழ் செயல்படும் கூட்டமைப்பு சங்கங்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தேமுதிக, புரட்சி பாரதம் உள்ளிட்ட 22 சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அண்ணா தொழிற்சங்க பேரவைச் செயலாளர் ஆர்.கமலகண்ணன் கூறியதாவது: வரும் 5-ம் தேதி போக்குவரத்து செயலரை சந்தித்து வேலைநிறுத்த நோட்டீஸை வழங்கவிருக்கிறோம். இதையடுத்து 20-ம் தேதி முதல் எந்த நேரத்திலும் வேலைநிறுத்தம் நடைபெறும். தொமுசவை தவிர்த்து அனைத்து சங்கங்களையும் ஒருங்கிணைத்து போராட்டத்தை முன்னெடுக்க உள்ளோம்.