மும்பை: ஜிஎஸ்டி வரி அடுக்குகள் 2 ஆகக் குறைக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்ததையடுத்து, சென்செக்ஸ் நேற்று வர்த்தகத்தின் இடையே 1,000 புள்ளிகள் உயர்ந்தது. கடந்த சில வாரங்களாக இந்திய பங்குச் சந்தைகள் சரிந்து வந்தன.
இந்நிலையில், சுதந்திர தினம் மற்றும் சனி, ஞாயிறு ஆகிய 3 நாள் விடுமுறைக்குப் பிறகு நேற்று காலையில் இந்திய பங்குச் சந்தைகள் உயர்வுடன் தொடங்கின. மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் வரை உயர்ந்தது. இதுபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிப்டி 350 புள்ளிகள் வரை உயர்ந்து 25 ஆயிரம் புள்ளிகளைக் கடந்தது.