புதுச்சேரி: புதுச்சேரியில் பள்ளிகளில் புகார் பெட்டி வைக்கும் நிகழ்வை வரும் 24-ல் துணை நிலை ஆளுநர் தொடங்கி வைக்கிறார். தவறு செய்வோரை மறைக்காமல் சட்டத்தின் முன் நிறுத்த போலீஸாருக்கு மக்கள் ஒத்துழைப்பது அவசியம் என புதுச்சேரி டிஜஜி சத்தியசுந்தரம் தெரிவித்தார்.
புதுவை தமிழ் சங்கத்தில் 2019-ம் ஆண்டு ஜனவரி 20-ம் தேதி திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டது. ஒவ்வொரு மாதமும் 20-ம் தேதி திருவள்ளுவர் சிலைக்கு தமிழ்ச்சங்க நிர்வாகிகள் மாலை அணிவித்து குறள் ஒப்புவிப்பது வழக்கம். திருக்குறளை மாணவர் மத்தியில் கொண்டு செல்வதற்கும், திருக்குறளை தேசிய நூலாக மத்திய அரசு அறிவிக்க வலியுறுத்தியும் இந்த நிகழ்வை தமிழ் சங்கத்தினர் நடத்தி வருகின்றனர்.