புதுமைப்பெண் திட்டத்தில் 4.97 லட்சம் மாணவிகள் பயன்பெற்றுள்ளதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அரசு பள்ளிகள் மற்றும் முழுமையாக அரசு உதவி பெரும் தமிழ் வழிப் பள்ளிகளில் பள்ளிப்படிப்பை முடித்து, உயர்கல்வி பயிலும் மாணவ மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 தடையற்ற நிதியுதவி வழங்கும் வகையில் புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டங்கள் தமிழக அரசின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த திட்டங்களின் நடைமுறையாக்கத்தை தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் தமிழ்நாடு மின் ஆளுமை நிறுவனம் செம்மைப்படுத்தி வருகிறது.