சென்னை: முன்னோடி இயற்கை விவசாயி புளியங்குடி அந்தோணிசாமிக்கு வேளாண் வேந்தர் விருதை தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் வழங்கி கவுரவித்துள்ளது.
இதுகுறித்து அந்தப் பல்கலைக்கழகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சாணம் மற்றும் கோமியம் போன்ற கால்நடை கழிவுப் பொருள்களையே இடுபொருள்களாக வைத்து நம் தாய் மண்ணின் வளத்தையும் செழுமையையும் மீட்டெடுக்கும் பணியில் தம்மை முழுமையாக அர்பணித்தவர் புளியங்குடி அந்தோணிசாமி.