சென்னை: சென்னையில் பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் வகையில், சென்னை காவல்துறை சார்பில் உருவாக்கப்பட்ட பிரத்யேக காவல் உதவி ‘க்யூ ஆர்’ குறியீட்டை ஆட்டோக்கள், வாடகை கார்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை மாநகருக்குள் பயணிகள், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை மேம்படுத்தவும், பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யவும், சென்னை பெருநகர காவல்துறை சார்பில் ஆட்டோக்கள் மற்றும் வாடகை கார்களுக்கு க்யூ ஆர் குறியீடு அடிப்படையிலான அவசரகால சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.