மூத்த தலைவர்கள் முயற்சியில் நடைபெற்ற செங்கோட்டையன் உடனான பேச்சுவார்த்தையில் அவர் சமாதானம் அடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுகவை ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் சீண்டி பார்த்து வந்த நிலையில், அதை எளிதில் எதிர்கொண்ட பழனிசாமி, கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையனின் பாராமுகத்தால் கொஞ்சம் அப்செட்டாகி இருந்தார். செங்கோட்டையன் தொடர்பாக பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அவர் அளித்த பதிலிலேயே அது வெளிப்பட்டது.