நாட்டின் 2025-26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்.1) தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் குறித்து வர்த்தக அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் தங்கள் கருத்தினை பகிர்ந்துள்ளார்.
மத்திய அமைச்சர் அமித் ஷா: பிரதமர் மோடியின் இதயத்தில் எப்போதும் நடுத்தர வர்க்கத்தினர்தான் உள்ளனர். ரூ.12 லட்சம் வருமானம் வரை வருமான வரி இல்லை. இந்த வரி விலக்கு நடுத்தர வர்க்கத்தினரின் நிதி நல்வாழ்வை மேம்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கும். இந்த சந்தர்ப்பத்தில் அனைத்து பயனாளிகளுக்கும் எனது வாழ்த்துகள்.