ரோம்: கத்தோலிக்க மத தலைவர் போப் பிரான்சிஸ்(88). இவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் உள்ள சிறப்பு வார்டில் கடந்த 14ம் தேதி அனுமதிக்கப்பட்டுள்ளார். பரிசோதனைகள் மூலம் அவருக்கு நுரையீரலில் இரட்டை நிமோனியா மற்றும் ஆஸ்துமா மூச்சுக்குழாய் அழற்சி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ்கள், பாக்டீரியாக்கள் மற்றும் பிற உயிரினங்களின் கலவை அவரது சுவாசக் குழாயில் தொற்றை ஏற்படுத்தியிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
போப் பிரான்சிஸ் நேற்று முன்தினம் இரவை நன்றாக கழித்தார். நேற்று நல்ல உடல் நிலையுடன் விழித்தெழுந்து காலை நாற்காலியில் அமர்ந்து உட்கொண்டார். போப் பிரான்சிஸ்சின் மருத்துவ நிலையில் முன்னேற்றம் உள்ளது. மருத்துவ ஊழியர்களால் மதிப்பிடப்பட்ட ரத்த பரிசோதனைகள், குறிப்பாக அழற்சி குறியீடுகளில் சிறிது முன்னேற்றத்தை காட்டுகின்றன என்று வாடிகன் செய்தி தொடர்பாளர் மத்தேயு புரூனி தெரிவித்தார். இத்தாலி பிரதமர் ஜார்ஜியோ மெலோனி நேற்று முன்தினம் போப்பை சந்தித்து பேசினார். போப் பிரான்சிஸ் வழக்கமான உடல்நிலையுடன் சிரித்து கொண்டே இருந்தார் என மெலோனி தெரிவித்துள்ளார்.
The post போப் பிரான்சிஸ் உடல் நிலை தேறுகிறது: வாடிகன் தகவல் appeared first on Dinakaran.