சென்னை: அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் ஊதியம் கிடையாது என்று தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தம் அறிவித்துள்ள நிலையில் எச்சரிக்கை விடுத்துள்ளது. பணிக்கு வராமல் வேலை நிறுத்தம் செய்யும் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் கிடையாது. மருத்துவ விடுப்பை தவிர சாதாரண விடுப்போ, மற்ற விடுப்போ அரசு ஊழியர்கள் எடுக்கக் கூடாது. காலை 10 மணிக்குள் பணிக்கு வராதவர்களின் விவரங்களை சேகரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
The post போராட்டம் – அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை appeared first on Dinakaran.