ஆரம்பகால தமிழ் சினிமாவின் நட்சத்திர வசனகர்த்தா இளங்கோவன். அக்காலத்தில் சூப்பர் ஹிட்டான அம்பிகாபதி, ஹரிதாஸ், கண்ணகி உள்பட பல படங்களின் வசனங்களை எழுதியவர் இவர். இவருடைய வசனங்களுக்காகவே பல படங்கள் வெற்றிபெற்றுள்ளன. 1943-ம் ஆண்டு வெளியான, புராணக் கதையை கொண்ட குபேர குசேலா வெற்றிபெற்றதை அடுத்து அதன் பாதிப்பில் இளங்கோவன் எழுதிய கதை ‘மகாமாயா’.
வரலாற்றுப் படமான இதில், பி.யு. சின்னப்பா, பி.கண்ணாம்பா, எம்.ஜி. சக்கரபாணி, என்.எஸ். கிருஷ்ணன், டி.ஏ.மதுரம், எம்.எஸ். சரோஜா, ஆர். பாலசுப்பிரமணியம், டி. பாலசுப்பிரமணியம், எஸ்.வி. சஹஸ்ரநாமம், எம்.கே. மீனலோச்சனி, ‘பேபி’ டி.டி. குசலம்பாள், டி. ராஜ்பாலா, டி. ஆர். பி. ராவ் ஆகியோர் நடித்தனர்.