சென்னை: மதுரை, திருச்சியில் டைடல் பூங்கா அமைக்க பிப்.13ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக்காட்சி மூலம் முதலமைச்சர் அடிக்கல் நாட்ட உள்ளார். திருச்சியில் 14.16 ஏக்கர் நிலத்தில் 5.58 லட்சம் சதுரஅடியில் ரூ.315 கோடியில் டைடல் பூங்கா அமைகிறது. மதுரையில் 9.97 ஏக்கர் நிலத்தில் 5.67 லட்சம் சதுர அடியில் ரூ.289 கோடி செலவில் டைடல் பூங்கா அமைகிறது.
The post மதுரை, திருச்சியில் டைடல் பூங்கா அமைக்க பிப்.13ம் தேதி அடிக்கல் நாட்டுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.