புதுடெல்லி: போபாலில் இருந்து டெல்லிக்கு ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகானுக்கு உடைந்த இருக்கை வழங்கப்பட்ட நிலையில், அது குறித்து அவர் வெளியிட்ட பதிவை அடுத்து விமான நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.
ஏர் இந்தியா விமானத்தில் தனக்கு நேர்ந்த துயரமான சம்பவத்தை சிவராஜ் சிங் சவுகான் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதில் அவர், “பூசாவில் வேளாண் திருவிழாவை தொடங்கி வைக்கவும், குருக்ஷேத்திரத்தில் இயற்கை வேளாண்மை இயக்கத்தின் கூட்டத்தை நடத்தவும் அதனைத் தொடர்ந்து சண்டிகரில் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் நடத்தவுமான பணிகள் காரணமாக, இன்று(சனிக்கிழமை) நான் போபாலில் இருந்து டெல்லிக்கு வர வேண்டி இருந்தது.