சென்னை: “11 ஆண்டுகளில் மத்திய பாஜக அரசு பெற்ற கடன் ரூ.130 லட்சம் கோடி. தமிழகத்தின் கடனைப் பற்றி பேசுவதற்கு அண்ணாமலைக்கு என்ன உரிமை இருக்கிறது?” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை பதிலடி தந்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக அரசின் மக்கள் நலன் சார்ந்த, வளர்ச்சியை நோக்கமாகக் கொண்ட நிதிநிலை அறிக்கையின் மீது கருத்து கூறிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இந்தியாவிலேயே அதிக கடன் பெற்றுள்ள மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது என்று குற்றம் சாட்டியிருக்கிறார். இதற்கு குஜராத் மாநிலத்தோடு ஒப்பிட்டு பேசியிருக்கிறார்.