சென்னை: திமுக எம்.பி தயாநிதி மாறன் சென்னை மத்திய தொகுதியில் வெற்றி பெற்றது செல்லும் எனக் கூறியுள்ள உயர் நீதிமன்றம், தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் சென்னை மத்திய தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட தயாநிதி மாறன் 2 லட்சத்து 33 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில், தயாநிதி மாறன் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி அத்தொகுதியில் தேசிய மக்கள் சக்தி கட்சி வேட்பாளராக போட்டியிட்ட வழக்கறிஞர் எம்.எல்.ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார்.