மதுரை: மதுரையில் திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக மத நல்லிணக்க மாநாடு நடத்திய இந்து இயக்கத்தினருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய மதுரை எம்.பி. உள்ளிட்டவர்கள் மீது வழக்குப் பதிய வேண்டும் என இந்து மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக மதுரை மாவட்ட இந்து மக்கள் கட்சித் தலைவர் சோலை கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதுரையில் மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு சார்பில் நடத்தப்பட்ட மத நல்லிணக்க மாநாட்டில் பேசியவர்கள், திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலி கொடுப்பதற்கு ஆதரவாக பேசியுள்ளனர். மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்து இயக்கங்களின் நிர்வாகிகளுக்கு மிரட்டல் விடுக்கும் வகையிலும், மதக்கலவரத்தை உருவாக்கும் வகையிலும் பேசியுள்ளனர்.