சென்னை: மனைவி பெயரில் வாங்கிய சொத்துகள் குறித்து முறைப்படி உயர் நீதிமன்றத்துக்கு தகவல் தெரிவிக்காத மாவட்ட நீதிபதிக்கு கட்டாய ஓய்வு அளித்தது சரியே என வழக்கை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.
கடந்த 2018-ம் ஆண்டு மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்ட எஸ்.குணசேகர் என்பவர் மீதான பல்வேறு குற்றச்சாட்டுகள் காரணமாக கடந்த 2020 ஏப்.20 அன்று அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அதே ஆண்டு விருப்ப ஓய்வு கேட்டு குணசேகர் அளித்த விண்ணப்பத்தை உயர் நீதிமன்றம் நிராகரித்தது. இந்நிலையில் அவருக்கு 58 வயது பூர்த்தியடைந்ததையடுத்து கடந்த 2021 ஆக.23 அன்று அவருக்கு மேலும் 2 ஆண்டுகளுக்கு பணி நீட்டிப்பு வழங்காமல் கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டது.