ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதி பைசரன் பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பிரபலங்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து பிரபலங்கள் தங்கள் சமூக வலைதளங்களில் பகிந்தவை:
கமல்ஹாசன்: “பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு என்னுடைய அனுதாபங்கள். காயமடைந்தவர்களுக்கு வலிமையும் மீட்சியும் கிடைக்க வாழ்த்துகிறேன். துக்கத்திலும், உறுதியிலும், சட்டம், ஒழுங்கு மற்றும் தேசிய பாதுகாப்பை நிலைநிறுத்துவதற்கான நமது உறுதிப்பாட்டிலும் இந்தியா ஒற்றுமையாக நிற்கிறது.”