மதுரை : மருத்துவக் கழிவுகள் கொண்டு வரும் வாகனங்கள் ஜப்தி செய்து ஏல நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகளை ஏற்றி வந்து குமரி மாவட்டம் மஞ்சலுகிராமத்தில் கொட்டிய லாரிகளை போலீசார் கைப்பற்றினர். இந்த லாரிகளை திரும்ப ஒப்படைக்கக் கோரி உரிமையாளர் சிபு விசாரணை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், லாரிகளை திரும்ப ஒப்படைக்க முடியாது என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து ஐகோர்ட் மதுரை கிளையில் சிபு மேல்முறையீடு செய்தார்.
இந்த மனு மீது நீதிபதி புகழேந்தி வழங்கிய உத்தரவில், “அண்டை மாநிலத்தில் இருந்து மருத்துவ கழிவை தமிழ்நாட்டில் கொட்டுவது தீவிரமான குற்றமாகும்; இதை அனுமதிக்க முடியாது. மருத்துவ கழிவுகள்
கொண்டு வந்த வாகனத்தை திரும்ப ஒப்படைக்க முடியாது. இது போல மருத்துவக் கழிவுகள் கொண்டு வரும் வாகனங்களை ஜப்தி செய்து ஏலம் விட தமிழக அரசுக்கு உத்தரவிடுகிறோம். லாரிகளை ஜப்தி செய்வதற்கான ான நடவடிக்கைகளை தலைமைச் செயலாளர் மேற்கொள்ள ஆணையிடுகிறோம், “இவ்வாறு தெரிவித்து, மருத்துவக் கழிவுகள் கொண்டு வந்த வாகனத்தை திரும்ப ஒப்படைக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்தார்.
The post மருத்துவக் கழிவுகள் கொண்டு வரும் வாகனங்கள் ஜப்தி செய்து ஏல நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!! appeared first on Dinakaran.