சென்னை : மருத்துவத்துறையில் இம்மாதம் ஜீரோ காலிப்பணியிடம் என்றநிலை உருவாகும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் 1,127 மருத்துவர்களுக்கு பணியிட மாறுதல் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் பேசுகையில், “தேர்வான 2,642 புதிய மருத்துவர்கள் பட்டியல் இன்னும் சற்று நேரத்தில் வெளியிடப்படும். 26ம் தேதி காலை 10.30 மணிக்கு புதிய மருத்துவர்களுக்கு பனியாணை வழங்கப்பட உள்ளது,”இவ்வாறு தெரிவித்தார்.
The post மருத்துவத்துறையில் இம்மாதம் ஜீரோ காலிப்பணியிடம் என்றநிலை உருவாகும் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் appeared first on Dinakaran.