புதுடெல்லி: ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-2 என பின்தங்கி உள்ளது. லீட்ஸில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து பர்மிங்ஹாமில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது.
இதன் பின்னர் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 3-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தியது. இதன் மூலம் தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என முன்னிலை வகிக்கும் நிலையில் 4வது டெஸ்ட் போட்டி வரும் 23-ம் தேதி மான்செஸ்டர் நகரில் தொடங்க உள்ளது. இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் கிரேக் சேப்பல் கூறியதாவது: