சென்னை: தமிழக அரசு சார்பில் மார்ச் 5-ம் தேதி நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்தில் பாஜக பங்கேற்காது என்றும், அன்றைய தினம் மும்மொழிக் கொள்கையை ஆதரித்து பாஜக கையெழுத்து இயக்கம் தொடங்க இருப்பதாகவும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முதல்வர் ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் எழுதிய கடிதம்: நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை குறித்து விவாதிக்க மார்ச் 5-ம் தேதி திட்டமிட்டுள்ள அனைத்து கட்சி கூட்டத்துக்கு தமிழக பாஜகவை அழைத்ததற்கு நன்றி. தொகுதி மறுவரையறை நடைமுறைகள் அதிகாரப்பூர்வமாக வெளியாவதற்கு முன்பே தவறாக புரிந்துகொண்டு அதுகுறித்து வேண்டுமென்றே பொய் சொல்லவே இந்த கூட்டத்தைக் கூட்டியுள்ளீர்கள்.