*பேராவூரணி அருகே சோகம்
பேராவூரணி, மார்ச்14: பேராவூரணி அருகே மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் பலியானார்.தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியம் மேலமணக்காடு பகுதியை சேர்ந்தவர் சிவராமன்(42). இவரது மனைவி கீதா(37). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்த சிவராமன், அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று வயரிங் வேலை பார்த்தார். பின்னர் வேலை முடிந்து பீஸ் போட சென்றபோது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் சிவராமன் கீழே விழுந்தார்.
இதில் அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே சிவராமன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இதுகுறித்து கீதா கொடுத்த புகாரின் பேரில் பேராவூரணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். எலக்ட்ரீசியன் வேலை பார்த்தவர் மின்சாரம் பாய்ந்து பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
The post மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் பலி appeared first on Dinakaran.