புதுடெல்லி: இந்திய மியூச்சுவல் பண்ட் சங்கம் (ஏஎம்எப்ஐ), இந்தியா போஸ்ட் ஆகியவை ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன. இதன்மூலம் நாட்டில் ஒரு லட்சம் தபால்காரர்களுக்கு மியூச்சுவல் பண்ட் தொடர்பான பயிற்சி அளித்து அதில் பொதுமக்களைச் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இதன்படி பயிற்சியைப் பெறும் தபால்காரர்கள், மியூச்சுவல் பண்ட் விநியோகஸ்தர்கள் என்று அழைக்கப்படுவர்.
இதன்மூலம் அவர்கள் நாட்டிலுள்ள சிறிய நகரங்கள், கிராமப்புறப் பகுதிகளில் மியூச்சுவல் பண்ட் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி, அந்தத் திட்டத்தில் மக்களைச் சேர்க்கும் பணிகளைச் செய்வர்.