துரை செந்தில்குமார் அடுத்து இயக்கவுள்ள படத்தில் சசிகுமார், விஜய் சேதுபதி இணைந்து நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
’கருடன்’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, ’லெஜண்ட்’ சரவணன் நடித்து வரும் படத்தினை இயக்கி வருகிறார் துரை செந்தில்குமார். இப்படத்தின் படப்பிடிப்பு எப்போது முடிவடையும் என்பது தெரியாமல் இருக்கிறது. இதனிடையே தனது அடுத்த படத்தினை முடிவு செய்திருக்கிறார் துரை செந்தில்குமார்.