சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 25ம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் பட்ஜெட் தாக்கல் தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது. தமிழ்நாடு சட்டப் பேரவையில் வரும் மார்ச் 14ம் தேதி தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. மேலும் 2025-2026 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்யவுள்ளார். அதைத் தொடர்ந்து 2025-26ம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை மார்ச் 15ம் தேதி வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்.
இந்நிலையில் தலைமை செயலகத்தில் வரும் பிப்ரவரி 25ம் தேதி மதியம் 12 மணியளவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கவுள்ளனர். இதில் 2025-26ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது தொடர்பாக விவாதிக்கப்படவுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் புதிதாக தொடங்கப்படவுள்ள திட்டங்கள், விரிவாக்கம் செய்யப்பட உள்ள தொழில்களுக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்படும் எனத் தெரிகிறது.
The post முதல்வர் தலைமையில் வரும் 25ம் தேதி அமைச்சரவை கூட்டம் appeared first on Dinakaran.