சென்னை: தமிழகம் முழுவதும் 809 மையங்களில் முதுநிலை ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வு நேற்று நடைபெற்றது. இதில் 2.20 லட்சம் பட்டதாரிகள் பங்கேற்றனர்.
அரசுப் பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர், கணினி பயிற்றுநர் ஆகிய பணிகளில் காலியாக இருந்த 1,996 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) கடந்த ஜூலை 10-ம் தேதி வெளியிட்டது. இதற்கான போட்டித் தேர்வை எழுத 3,734 மாற்றுத் திறனாளிகள் உட்பட 2.36 லட்சம்பட்டதாரிகள் விண்ணப்பித்தனர்.