நேற்று (ஜூன் 4) பெங்களூருவில் நிகழ்ந்த வெற்றி கொண்டாட்டம், துயரமான நாளாக மாறியது. சின்னசாமி மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த நிலையில், இத்தகைய கொண்டாட்டங்கள், கூட்ட நெரிசல் சம்பவங்கள் மற்றும் அதற்கான காரணங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.