மும்பையைச் சேர்ந்த ஒரு மூதாட்டி டிஜிட்டல் கைது முறைகேடு மூலம் ரூ.20 கோடியை இழந்துள்ளார். இந்த மோசடியில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.
மும்பையைச் சேர்ந்த 86 வயது மூதாட்டிக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி செல்போனில் ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசியவர் காவல் துறை அதிகாரி என கூறி தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். அப்போது, அந்த மூதாட்டியின் ஆதார் எண் சட்டவிரோத செயல்களுக்காக தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக அவரிடம் தெரிவித்துள்ளார்.