மகாராஷ்டிர மாநிலம் மும்பை தாராவி பகுதியில் தற்போது அதானி குழுமம் மேற்கொண்டு வரும் வரும் மறுசீரமைப்பு கட்டுமானப் பணிகளுக்கு தடைவிதிக்க உச்சீதிமன்றம் நேற்று மறுத்துவிட்டது.
மும்பையில் 259 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள தாராவி மறுசீரமைப்பு திட்டதுக்கான ரூ.5,069 கோடி டெண்டரை 2022-ம் ஆண்டு அதானி குழுமத்துக்கு மகாராஷ்டிர மாநில அரசு வழங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய அரபு எமிரேட்டைச் (யுஏஇ) சேர்ந்த செக்லிங்க் டெக்னாலஜிஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த நீதிமன்றம், அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்ட டெண்டருக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கான வலுவான ஆதாரங்கள் எதையும் செக்லிங்க் நிறுவனம் தாக்கல் செய்யவில்லை எனக் கூறி அந்த மனுவை தள்ளுபடி செய்து அதானி குழுமத்துக்கு ஆதரவாக மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.