மும்பை, வான்கடேயில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற த்ரில் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்சிடம் மும்பை இந்தியன்ஸ் கடைசி வரை போராடி தோல்வி கண்டது. குறிப்பாக தீபக் சாஹர் கடைசி ஓவரில் முக்கியக் கட்டத்தில் வீசிய நோ-பாலும், அதற்கு முன்பாக 8=வது ஓவரில் ஹர்திக் பாண்டியா வீசிய 2 நோபால்களும் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியாவினால் தோல்விக்கான காரணமாக சுட்டப்பட்டுள்ளது.
பொதுவாக, களத்திலேயே கோபத்தைக் காட்டுபவராக தொடங்கி இப்போது சற்றே நிதானம் காட்டும் முதிர்ச்சி பெற்றிருக்கும் ஹர்திக் பாண்டியா போட்டி முடிந்த பிறகு அணியின் ஆட்டத்தை விமர்சிக்கத் தயங்க மாட்டார். ரோஹித் சர்மா போல் வழவழா கொழகொழா சாக்குப் போக்குகளெல்லாம் சொல்ல மாட்டார்.