
புதுடெல்லி: பிஹார் தேர்தல் முடிவுகளில் பாஜக அங்கம் வகிக்கும் என்டிஏ கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில், இதை மேற்கோள் காட்டி தனது கருத்தை பகிர்ந்துள்ளார் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்.
“பிஹார் மாநிலத்தை பற்றி அறிந்தவர்களுக்கு நிச்சயம் இது தெரியும். பிஹார் மக்கள் அராஜகம் மற்றும் காட்டாட்சியை அறவே விரும்பவில்லை. அதனால் பிஹார் மக்கள் அவர்களை புறக்கணித்துள்ளனர். இப்போதைய இளைஞர்கள் காட்டாட்சி முறையை கண்டதில்லை. ஆனால் அவர்கள் வீட்டு பெரியவர்கள் அந்த ஆட்சியை கண்டுள்ளனர். ஊழல் தலைவர்களிடம் பிஹாரை ஒப்படைக்க அவர்கள் தயாராக இல்லை.

