சென்னை: கடனை வசூலிக்க நெருக்கடி கொடுத்தால் தண்டனை வழங்கும் வகையில், தமிழக சட்டமன்றத்தில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மசோதா ஒன்றை கடந்த 26ம் தேதி தாக்கல் செய்துள்ளார். இதற்கு தமிழ்நாடு விவசாயிகள் நல உரிமைச்சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அச்சங்கத்தின் நிறுவனத் தலைவர் ராஜபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தனிநபர்கள், சுய உதவிக்குழுக்கள் உள்ளிட்டவற்றுக்கு கடன் வழங்கும் நிறுவனங்கள் வலுக்கட்டாயமாக கடன் வசூலிப்பதைத் தடுக்க வகை செய்யும் புதிய சட்டத் திருத்த மசோதாவை சட்டசபையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்தார். இந்த சட்டத்திருத்தத்தின்படி, கடன் பெறுவோருக்கும் கடன் வழங்கும் நிறுவனத்துக்கும் இடையே உள்ள பூசல்களை தீர்த்துவைக்க குறை தீர்ப்பாயர் நியமிக்கப்பட வேண்டும்.