இம்பால்: மைதேயி, குகி குழுக்கள் மற்றும் மத்திய அரசு இடையே சுமுக உடன்பாடு எட்டப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலையை திறக்க குகி நிர்வாகக் குழு ஒப்புக் கொண்டுள்ளது. அந்த மாநிலத்தில் விரைவில் அமைதி திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் மணிப்பூரில் மைதேயி, குகி சமுதாயத்தினர் இடையே மோதல் ஏற்பட்டது. மாநிலம் முழுவதும் கலவரம் வெடித்து 258 பேர் உயிரிழந்தனர்.
1,108 பேர் காயமடைந்தனர். 400 தேவாலயங்கள், 132 இந்து கோயில்கள் சேதப்படுத்தப்பட்டன. சுமார் 60,000-க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்தனர். கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக மணிப்பூரில் வன்முறை நீடித்து வருகிறது. வரும் 13-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி மணிப்பூர் மாநிலத்துக்கு செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.