தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ளாவிட்டால் தமிழகத்திற்கு நிதி கிடையாது என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேட்டியளித்ததையடுத்து தமிழகத்தின் மொழிக் கொள்கை சர்ச்சையாகியுள்ளது.
தமிழகத்தின் இந்தி எதிர்ப்பு பயணத்திற்கு நீண்டகால வரலாறு உண்டு. ராஜாஜி காலத்தில் ‘இந்துஸ்தானி’ மொழியை 1938-ம் ஆண்டு தமிழக பள்ளிகளில் அறிமுகம் செய்ய முயன்றபோது தொடங்கியது இந்தி எதிர்ப்பு. அந்த முயற்சி அப்போது கைவிடப்பட்டு, 1963-ல் அண்ணாதுரை கைது செய்யப்பட்டபோது போராட்டமாக வெடித்தது. மீண்டும் 1965-ம் ஆண்டு அண்ணாதுரை கைதானபோது இந்தி எதிர்ப்பு போராட்டம் கொழுந்துவிட்டு எரிந்தது.