ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த பாவாடப்பட்டியை சேர்ந்த முனியப்பா(55) என்பவர் இன்று காலை விவசாய பணிக்காக ஊடேதுர்க்கம் வனப்பகுதி வழியாக சென்றுள்ளார். அப்பகுதியில் சுற்றித்திரிந்த ஒற்றை யானை, முனியப்பா சென்ற பாதையில் பதுங்கி இருந்துள்ளது. அதிகளவு பனிமூட்டம் இருந்ததால் அந்த பகுதியில் யானை இருந்தது அவருக்கு தெரியவில்லை. இதனிடையே யானை, முனியப்பாவை துரத்தி அவரை மிதித்துள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
The post யானை மிதித்து விவசாயி பலி appeared first on Dinakaran.