பிரயாக்ராஜ்: சமீபத்தில் நடைபெற்ற மகா கும்பமேளாவின் போது உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் திட்டம் இருந்ததாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
பிரயாக்ராஜ் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அகிலேஷ் யாதவ், “அவர்கள்(பாஜக) அதை ஒரு அரசியல் கும்பமேளாவாக மாற்ற விரும்பினர், மதரீதியிலானதாக அல்ல. இது பக்தர்களுக்கான கும்பமேளா அல்ல, அரசியல் நோக்கங்களுக்கானது. மகா கும்பமேளாவின்போது, அவரது (யோகி ஆதித்யநாத்) பெயரை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கும் திட்டம் இருந்ததாகக் கூறப்படுகிறது.