ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தமிழக அணியில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு திருச்சியைச் சேர்ந்த வீரர் இடம் பிடித்துள்ளார்.
திருச்சி கே.கே.நகர் கிருஷ்ணமூர்த்தி நகர் இ.பி காலனியைச் சேர்ந்தவர் ஆர்.ஜெகநாதன்- ஜெ.பிருந்தா தம்பதியின் மகன் ஹேம்சுதேசன் (17). திருச்சி கே.கே.நகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கிறார். 4 வயது முதல் கிரிக்கெட் விளையாடி வரும் இவர், திருச்சி மாவட்ட கிரிக்கெட் சங்க அணியிலும், தமிழக அணியில் இடம் பிடித்து தனது திறமையை வெளிப்படுத்தி வந்தார்.