சென்னை: புனித ரமலான் மாதத்தில் நோன்பு கடைபிடிக்கும் முஸ்லிம்களுக்கு நோன்புக் கஞ்சித் தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஒவ்வொரு ஆண்டும் புனித ரமலான் மாதத்தில் நோன்பு கடைபிடிக்கும் முஸ்லிம் மக்களுக்கு நோன்புக் கஞ்சி தயாரித்து வழங்கும் பொருட்டு, பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி, தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டுகளைப் போலவே, 2025-ம் ஆண்டிலும் ரமலான் மாதத்தில் நோன்புக் கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்க வேண்டும் என்று முஸ்லிம் மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.