புதுடெல்லி: ரயில் கடத்தல் சம்பவத்தில், இந்தியாவுக்கு தொடர்பு உள்ளது என்ற பாகிஸ்தான் குற்றச்சாட்டை மறுத்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், அடுத்தவர் மீது குற்றம்சாட்டுவதற்கு பதில், பாகிஸ்தான் உள்நாட்டு பிரச்சினையில் கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியில் குழப்பத்தை ஏற்படுத்த பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் என்ற அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகளுக்கு இந்தியா உதவி வருவதாக பாகிஸ்தான் தொடர்ந்து குற்றம் சாட்டிவருகிறது. இதை இந்தியா வன்மையாக மறுக்கிறது.