வாஷிங்டன்: நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 2022-ம் ஆண்டு போர் தொடங்கியது. இந்த போர் 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இதில் உக்ரைனுக்கு அமெரிக்கா, நேட்டோ அமைப்பு உதவி வருகின்றன. அதேவேளையில் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்து வரும் இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகளுக்கு நேட்டோ அமைப்பு தலைவர் மார்க் ருட்டே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உக்ரைனுடன் அமைதிப் பேச்சுவார்த்தையை ரஷ்யா தீவிரமாக எடுக்க மறுப்பு தெரிவித்து வருகிறது. நீங்கள் சீனாவின் அதிபராகவோ, இந்தியப் பிரதமராகவோ அல்லது பிரேசிலின் அதிபராகவோ இருந்து, ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்து அவர்களின் எண்ணெய் மற்றும் எரிவாயுவை வாங்குவதைத் தொடர்ந்தால் பெரும் விளைவுகளை சந்திக்க வேண்டிவரும். ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்தால் கடுமையான 100 சதவீத பொருளாதார தடைகள் விதிக்கப்படும்.
இதன்காரணமாக இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகளுக்கு பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படலாம் என மார்க் ருட்டே கூறினார். ஏற்கனவே ரஷியாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 500 சதவீத வரி விதிக்கும் மசோதா அமெரிக்காவில் முன்மொழியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ரஷ்யாவின் ஒட்டுமொத்த எண்ணெய் ஏற்றுமதியில் இந்தியா சுமார் 15% பங்களிப்பை கொண்டுள்ளது.
The post ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்தால் பொருளாதார தடையை விதிக்கப்படும்: இந்தியாவுக்கு NATO எச்சரிக்கை appeared first on Dinakaran.