ஜெய்ப்பூர்: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கெதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் ஐபிஎல் அணி சார்பில் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் அறிமுகமான வைபவ் சூர்யவன்ஷி 20 பந்துகளில் 34 ரன்கள் குவித்து முத்திரையைப் பதித்துள்ளார். முதல் போட்டியிலேயே அனைவரையும் கவர்ந்துவிட்ட சூர்யவன்ஷிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
ஜெய்ப்பூரில் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வென்றது. 180 ரன்கள் இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான் அணி 178 ரன்கள் எடுத்து வெற்றிக்கு அருகில் வந்து தோல்வி கண்டது.