புதுடெல்லி: ராமநாதபுரத்தின் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண விரிவான புதிய திட்டத்தை அறிவிக்க நாடாளுமன்றத்தில் குரல் எழுந்துள்ளது. இதை அதன் மக்களவை தொகுதியின் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கின் எம்.பி.யான கே.நவாஸ்கனி வலியுறுத்தினார்.
இது குறித்து ராமநாதபுரம் தொகுதி எம்.பி.யான நவாஸ்கனி நாடாளுமன்ற மக்களவையில் விதி 377-ன் கீழ் பேசியதாவது: என்னுடைய ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி வறட்சியான பகுதி. வற்றாத நீர்நிலைகள் என்று குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு எந்த நீர் நிலைகளும் இல்லாத பகுதி. எனவே விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யவேண்டிய நிலை உள்ளது.