சென்னை: ரூ. 10 ஆயிரம் கோடி கொடுத்தாலும் மும்மொழி கொள்கையை ஏற்க மாட்டோம் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மீண்டும் உறுதிபட தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திமுக தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கை: கழகத் தலைவர் – தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (23.02.2025) சென்னை, கொளத்தூரில் நடைபெற்ற கொளத்தூர் கிழக்குப் பகுதிச் செயலாளரும், தி.மு.க. ஐ.சி.எப். லேபர் யூனியன் பொதுச் செயலாளருமான வ. முரளிதரன்–லதா தம்பதியரின் மகன் மகேஷ்வர் மற்றும் திவ்யகணபதி ஆகியோரது திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்து, மணமக்களை வாழ்த்தி, ஆற்றிய உரை: